தாழ்வு மனப்பான்மையை எப்படி எதிர் கொள்வது?
தாழ்வு மனப்பான்மை இல்லாத ஒருவரை இந்த உலகில் நாம் காண முடியாது . ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சில விஷயங்களில் தாழ்ந்தே காணப்படுகிறோம் . தாழ்வு மனப்பான்மை எப்பொழுது உருவாகிறது ? நாம் உடல்வாகில் மற்றவரை போல் இல்லாத போதோ அல்லது மற்றவர் போல் சில செயல்களை செய்ய இயலாதபோதோ நாம் நம்மையும் அறியாமல் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டு கொள்ள தொடங்குகிறோம் அவ்வாறு செய்யும் போது நாம் மற்றவரை விட தாழ்ந்து காணப்படும் போது ஒரு விதமான வலி மனதுள் எழ ஆரம்பிக்கும் இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக மாறும் . ஒரு புள்ளியில் நாமே நம்மை தாழ்வாக என்ன தொடங்குவோம் . இப்படியான சூழலில் நிறைய பிரச்சனைகளையும் தோழ்விகளையும் சந்திக்க நேரிடும் . எவ்வாறு தாழ்வு மனப்பான்மையை எதிர் கொள்வது:- நாம் வாழும் வாழ்க்கை மிகவும் சிறிய எண்ணிக்கையிலான நாட்களைக்கொண்டது . அதை நாம் உணர்வதே இல்லை . வாழ்க்கையின் பாதி நாட்களை நாம் இழந்தவைகளையும் நம்மால் பெற முடியாதவைகளை பற்றியும் இன்னும் சில நேரங்களில் மற்றவர்களின் குறைகளைப்...